• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-03-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்கும் இடையில் இரு தரப்பு விமான சேவைகள் பற்றிய கலந்துரையாடல்
- இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்கும் இடையில் இரு தரப்பு புதிய விமான சேவைகள் உடன்படிக்கையொன்றை செய்து கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் இரு நாடுகளினதும் விமான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் 2015 நவெம்பர் மாதத்தில் ஒஸ்ரியாவின் வியானா நகரத்தில் நடாத்தப்பட்டது. இதற்கமைவாக, இந்தக் கலந்துரை யாடல்களில் உடன்பட்டவாறு இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்கும் இடையில் இரு தரப்பு புதிய விமான சேவைகள் உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்தின் தத்துவம் பெற்ற பிரதிநிதி ஒருவரின் ஊடாக கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் இந்த உடன்படிக்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்து வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.