2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை பால் உற்பத்தியில் சிறந்த பயிற்சி அணுகல் சார்பில் நடைமுறையிலுள்ள கூட்டு உடன்படிக்கை - உள்நாட்டு பால் பண்ணைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக விலங்கு உற்பத்தி, சுகாதார திணைக்களத்தினால் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கப்படும் விரிவாக்கல் சேவையின் தரத்தையும் அளவையும் அதிகரிக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள மேற்போந்த உடன்படிக்கையானது நியூசிலாந்து அரசாங்கத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வர்த்தக அமைச்சுக்கும் இலங்கையின் நிதி அமைச்சுக்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ளது. இதன் கீழான செயற்பாடுகள் 2.5 மில்லியன் நியூசிலாந்து டொலர்கள் கொண்ட நிதி உதவியுடன் மூன்று (03) வருட காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, மேற்போந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |