2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேர்தல் தொகுதியொன்றுக்கு 1,000 வீடுகள் வீதம் நிருமாணிக்கும் “சமட்ட செவன” தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் - புதிய வீடுகளை நிருமாணித்தல், உள்ள வீடுகளை மேம்படுத்துதல் அதேபோன்று வீடுகளின் மற்றும் வசிக்கும் காணிகளின் உரிமையை உடைமையாக்குதல் என்பன 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள “சமட்ட செவன” தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை எதிர்பார்ப்பாகும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிட்டு நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரிவுகளையும் தழுவி நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, வீடொன்று 500 சதுர அடியளவில் தேர்தல் தொகுதியொன்றில் 1,000 வீடுகள் வீதம் நிருமாணிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, வீடொன்றுக்கான அரசாங்கத்தின் உச்சப்பங்களிப்பு 300,000/- ரூபாவாகும். வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஏற்கனவே 5,800 மில்லியன் ரூபா 2016 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சுக்கு குறித்தொதுக்கப் பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் தேவைப்படும் மீதி நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |