• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான அமைப்பிலுள்ள நாடுகளின் மின்சார அணுப்பீட்டு முறைமைகளை இணைப்பது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- வங்காள விரிகுடா சார்ந்த நாடுகளின் பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு தொடர்பிலான அமைப்பின் உறுப்பு நாடுகளான பங்காளதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளின் அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் 2015 ஒக்றோபர் மாதம் புதுடில்லியில் நடாத்தப்பட்ட சம்மேளனத்தில் வலுசக்தி ஒத்துழைப்பு தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டமொன்று அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு கட்டமாக உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பின் மூலம் மின்சார அனுப்பீட்டு முறைமைகளை இணைத்து மின்சாரத்தைப் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று வரையப்பட்டுள்ளது. அதன் குறிக்கோளாவது வலயத்திலுள்ள அனைத்து உறுப்பு நாடுகளிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உயர் மட்டத்தில் அனுப்பீடு செய்வதாகும். இதற்கமைவாக மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.