• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான தீர்வை வரியைத் திருத்துதல்
- எதிர்வரும் 2015/2016 பெரும்போகத்தில் கிடைக்கவுள்ள உள்நாட்டு நெல் உற்பத்தியைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் விததத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசி கிலோ ஒன்றுக்கு 35/- ரூபாவாகவுள்ள தீர்வை வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 50/- ரூபாவாக 2016‑02‑01 ஆம் திகதியிலிருந்து அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2016‑02‑01 ஆம் திகதியிடப்பட்டதும் 1952/10 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.