• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை உருவாக்கிக் கொள்வதற்காக இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சுக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான ஜேர்மன் சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், வறுமையைக் குறைத்தல் போன்றவற்றுக்காக வழங்கப்படும் பங்களிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி துறையானது அபிவிருத்தி செய்யவேண்டிய முக்கிய துறையொன்றாக இலங்கை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. அபிவிருத்தியின் பங்கில் இந்த துறைக்குரிய முக்கியத்துவத்தை கவனத்திற்கொண்டு ஏற்றுமதி சந்தைக்கு நுழைவதற்கான வசதிகளை செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும். இதற்கமைவாக, இலங்கைக்கும் ஜேர்மனியின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்குமிடையில் வர்த்தக வாய்ப்புகள் மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கு அரசாங்கம் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை அதிமேதகைய சனாதிபதி அவர்களின் ஜேர்மனுக்கான அண்மைய விஜயத்தின் போது இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சுக்கும் ஜேர்மன் பெடரல் குடியரசின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான ஜேர்மன் சங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.