• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கம்பஹா, அத்தனகல, மினுவன்கொட இணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம்
- கம்பஹா, அத்தனகல, மினுவன்கொட பிரதேச செயலக பிரிவுகளையும் மீரிகம பிரதேச செயலகப் பிரிவின் ஒரு பகுதியையும் தழுவும் விதத்தில் பாதுகாப்பானதும் நம்பகரமானதுமான குடிநீர் வழங்குவது இந்த கருத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதன் மூலம் சுமார் 300,000 மக்களுக்கு புதிதாக குடிநீர் வசதி கிடைப்பதோடு, ஏற்கனவே சுமார் 100,000 மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதிக்கான சேவை மட்டமும் விருத்தியடையும். இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்காக இந்தக் கருத்திட்டத்திற்கான செலவில் 85 சதவீதத்தை தழுவும் விதத்தில் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதி பெற்றுக் கொள்வதற்கும் இதற்குரியதான உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்குமாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.