2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் கம்பனிக்கு தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான சிரிங்கபாத்த பண்ணையிலிருந்து காணித் துண்டொன்றை கையளித்தல் - வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் கம்பனி முற்றுமுழுதாக பொதுத் திறைசேரிக்கு பங்குகள் உரித்துடைய பால் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமாகும். இந்த கம்பனியின் நாராஹேன்பிட்டியிலுள்ள பழைய தொழிற்சாலைக்குப் பதிலாக நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பால் பதனிடல் தொழிற்சாலையொன்றை படல்கம பிரதேசத்தில் தாபிக்கும் கருத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றதோடு, அதற்குத் தேவையான 35 ஏக்கர் காணியை தேசிய கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி சபையின் கீழ் நிருவகிக்கப்படும் சிரிங்கபாத்த பண்ணை காணியிலிருந்து வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |