• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மரதகஹமுல களஞ்சியத் தொகுதியை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கையளித்தல்
- 2014 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானமொன்றுக்கு அமைவாக 372 மில்லியன் ரூபா செலவில் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் நிருமாணிக்கப்பட்ட திவுலபிட்டிய பிரதேச செயலக பிரிவின் மரதகஹமுல கிராமத்திலுள்ள சுமார் 61,000 சதுர அடி கொண்ட களஞ்சிய தொகுதியும் தற்போது நிருமாணிக்கப்பட்டு வரும் 110 கடை அறைகளும் இதுவரை முறையான நிருவாக அதிகாரமொன்றிற்கு கையளிக்கப்படாததோடு, தற்போது முறையான முகாமைத்துவமின்றி பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு வசதிகளை ஏற்பாடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் நிருமாணிக்கப்பட்ட இந்த களஞ்சியத் தொகுதியைப் பராமரித்து பயன்படுத்தி பேணுவதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கையளிக்கும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.