• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மின்னணு கல்வி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- இன்றைய உலகின் போக்கிற்கு அமைவாக நாடொன்றின் வளர்ச்சிக்கு கணனி அறிவு அத்தியாவசிய காரணியாக அமைவதோடு, இலங்கையில் கணனி அறிவு சம்பந்தமாக கூடிய கவனம் செலுத்தப்பட்டு பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று தொழில் சந்தையில் நுழையும் போது கணனி அறிவு கட்டாயத் தகைமையொன்றாகும். இலங்கையில் மின்னணு கல்வி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரிப்பொன்று சீனாவின் சிங்ஹூவா பல்கலைக்கழகத்தின் இணை நிறுவனமான UNIS நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழக நுழைவு கிடைக்கப்பெறாத மாணவர்கள், தொழில் இல்லாத இளைஞர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் கணனி அறிவு இல்லாத இளைஞர்கள் போன்றோர்களுக்கு நன்மை கிடைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. கொழும்பு நகரத்தினுள் தாபிக்கப்படும் பிரதான நிலையத்துடன் மின்னணு கல்வி நிலையங்கள் 09 மாகாணங்களிலும் தாபிக்கப்படும். இதற்கமைவாக, உரிய அமைச்சுக்களுடன் சேர்ந்து இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.