2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மூன்று நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியிடமிருந்து கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல் - பின்வரும் நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் பயன்மிக்க சமூக மற்றும் பொருளாதார நன்மைகள் பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த நீர்வழங்கல் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்குத் தேவையான கடன் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியுடன் கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்கு தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு அதிகாரத்தைக் கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: * அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம் (ஐ.அ.டொலர் 164.9 மில்லியன்) * குண்டசாலை - ஹாரகம நீர்வழங்கல் கருத்திட்டம் (ஐ.அ.டொலர் 146.31 மில்லியன்) * பொல்கஹவெல, பொத்துஹர மற்றும் அலவ்வ ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டம் (ஐ.அ.டொலர் 91.8 மில்லியன்) |