• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய அரசாங்கத்தின் உதவியின் மீது ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பெருந்தோட்ட மக்களுக்காக 4,000 வீடுகளை நிருமாணித்தல்
- இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் 2012 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக 2016-2019 வரையிலான மூன்று (03) வருட காலத்திற்குள் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு 4,000 வீடுகள் நிருமாணித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது கட்டமாக 1,134 வீடுகளை நிருமாணிப்பதற்குரியதான ஆரம்பப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மீதி 2,866 வீடுகளை நிருமாணிப்பதற்குரியதான தொடக்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 7 பேர்ச்சர்ஸ் விஸ்தீரணம் கொண்ட காணியில் 550 சதுர அடிகளுடனான வீட்டு வசதியுடன் நிருமாணிக்கப்படுவதோடு, வீடொன்றுக்காக உறப்படும் மொத்த செலவு 1,120,000/- ரூபாவாகும் இதற்காக பயனாளிகளை தெரிவு செய்யும் போது மண்சரிவுக்குள்ளான மற்றும் மண்சரிவு அபாயம் கூடுதலாகவுள்ள பிரதேசங்களில் வாழும் குடும்பங்களுக்கும் தீயினால் சேதமடைந்த லயன் அறைகளில் வசித்த குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இந்தக் கருத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் ஒவ்வொரு தரப்பினதும் பொறுப்புகளையும் பணிகளையும் தெளிவாக குறிப்பிடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு மலையக புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் யூ.பழனி திகம்பரம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.