2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை வர்த்தக கப்பலோடிகளுக்கு சருவதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட "தொடர் விடுவிப்பு சான்றிதழ்கள் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்கள் - இலங்கை கப்பலோடிகளின் அறிவு, திறமை மற்றும் சிறந்த எண்ணம் காரணமாக சருவதேச கப்பல் கம்பனிகளிடமிருந்து அவர்களுக்கு கூடுதலான கேள்வி நிலவுகின்றது. பெரும்பாலான கப்பல் கம்பனிகளிலுள்ள பாரிய கப்பல்களில் கப்பல் தலைவர்களாகவும், உத்தியோகத்தர்களாகவும் கப்பல் பொறியியலாளர்களாகவும் ஏனைய தொழினுட்ப உத்தியோகத்தர்களாகவும் இலங்கையர்கள் செயலாற்றுவதோடு, இவர்களுடைய உழைப்பு காரணமாக கணிசமான அன்னிய செலாவணி எமது நாட்டுக்கு கிடைக்கின்றது. இலங்கை வர்த்தக கப்பலோடிகளுக்கு அவர்களுடைய தொழில்களை செய்வதற்கு வணிகக் கப்பல் பணிப்பாளர் அதிபதியினால் வழங்கப்படும் "தொடர் விடுவிப்பு சான்றிதழ்கள்" மற்றும் "தேர்ச்சி சான்றிதழ்கள்" ஆகிய சான்றிதழ்களைப் பெற்றிருப்பது சட்ட தேவையொன்றாகும். அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் அதன் கப்பலோடிகளுக்கு வழங்கப்படும் இந்த சான்றிதழ்களுடன் ஒப்பிடும் போது இலங்கையினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் சருவதேச தரங்களுக்கு ஏற்றவாறு மேலும் விருத்தி செய்யப்படவேண்டியுள்ளது. இதற்கமைவாக, ஆயளவைத் தகவல்களைக் கொண்ட சருவதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற "தொடர் விடுவிப்பு சான்றிதழ்கள் மற்றும் தேர்ச்சி சான்றிதழ்கள்" இலங்கை கப்பலோடிகளுக்கு வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |