2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (2016 - 2018) - கமத்தொழில் மற்றும் உணவு உற்பத்தி துறைசார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனியார்துறை பிரதிநிதிகளுடன் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தில் நடாத்தப்பட்ட கூட்டத்திலே முன்வைக்கப்பட்ட அவதானிப்புரைகளுக்கு அமைவாக உணவு உற்பத்திக்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்து வதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிர்செய்கையை மேம்படுத்தும் அத்தகைய பயிரொன்றை எவரேனும் இறக்குமதியாளர் ஒருவர் நுகர்வுப் பொருளொன்றாக இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது அவற்றை கட்டளையிடுவதற்கு முன்னர் கமத்தொழில் திணைக்களத்தின் இசைவாக்கத்தினைப் பெற்றுக் கொள்வதனை கட்டாயமாக்குதல், உள்நாட்டு உற்பத்தி போதுமானதாக இல்லாத சந்தர்ப்பங்களில் குறித்த பயிர் இறக்குமதி செய்யப்படுமாயின் மேற்போந்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிர்செய்கையை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள தனியார் கம்பனிகள் மற்றும் நிறுவனங்களுக்கு அந்தந்த பயிர்களை நுகர்வுப் பொருட்களாக இறக்குமதி செய்வதற்கு வாய்ப்புகளைச் செய்து கொடுத்தல், நுகர்வுப் பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் அந்தந்த உணவு உற்பத்திகள் சுகாதார ரீதியில் பாதுகாப்பானதெனவும் உயர் தரம் கொண்டதெனவும் உறுதிப்படுத்துவதற்கு தரப் பரிசோதனைக்கான புதிய வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தல் போன்ற பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |