• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய நிலையமொன்றை பதுளை யில் தாபிப்பதற்காக காணியொன்றை குறித்தொதுக்குதல்
- பல்கலைக்கழக அனுமதி அதேபோன்று ஏனைய உயர் கல்வி வாய்ப்புகள் இல்லாமற்போகும் மாணவர்களுக்கு தரம்மிக்க உயர் கல்வியை வழங்கும் நோக்கில் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டுள்ளதோடு, அதன் பிராந்திய நிலையமொன்றை பதுளை மாவட்டத்தில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஊவா மாகாணத்திற்குள் விசேடமாக பதுளை மாவட்டத்தில் வசிக்கும் பாடசாலை கல்வியை முடிப்பவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் உயர் கல்விக்கான விசேட வாய்ப்பு உரியதாகும். இதற்கமைவாக இந்த பிராந்திய நிலையத்தை தாபிப்பதற்குப் பொருத்தமானதென இனங் காணப்பட்டுள்ள, பதுளை மாவட்டத்தின் பதுளை பிரதேச செயலாளர் பிரிவின் ஹிங்குறுகமுவேயிலுள்ள ஏக்கர் 2 றூட் 2 பேர்ச்சஸ் 3.2 விஸ்தீரணம் கொண்ட காணியை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு உடைமையாக்குவதற்காக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.