• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-02-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை சட்டத்தைத் திருத்தும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம்
- நீதிமன்ற மனையிடங்களில் நீதிமன்ற காண்பிப்புப் பொருட்கள் பெருமளவில் ஒன்றுதிரண்டிருத்தல் தற்போது பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இதற்கமைவாக, வழக்கு நடவடிக்கைகள் முடிவடைவதற்கு முன்னர் அவற்றுக்குரிய காண்பிப்புப் பொருட்களை அகற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின் 431 ஆம் 432 ஆம் பிரிவுகளை திருத்துவதற்கு வரையப்பட்ட திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.