• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மூன்று களஞ்சியத் தொகுதிகளை நிருமாணித்தல்
- கமத்தொழில் துறையின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் நாட்டின் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்குமாக 2016 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஆரம்ப நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளதோடு, அதிக அறுவடை கிடைக்கும் காலப்பகுதிகளில் விவசாயிகளுக்கு அவர்களுடைய நெல், சோளம், எள்ளு, மிளகு மற்றும் உழுந்து போன்ற தானிய வகைகளை களஞ்சியப்படுத்தும் பொருட்டு உயர்தரத்திலான களஞ்சிய வசதிகளை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் பொலன்நறுவை, கிளிநொச்சி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மூன்று களஞ்சியத் தொகுதிகளை நிருமாணிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக விவசாயிகளுக்கு உச்ச நலனை கூடிய விரைவில் வழங்கும் நோக்குடன் மேற்போந்த களஞ்சிய தொகுதிகளை நிருமாணிக்கும் கருத்திட்டத்தை துரிதமாக பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த களஞ்சிய தொகுதிகளை நிருமாணிப்பதற்கான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளிக்கும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.