• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொது மக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் வசதியானதுமான பேருந்து சேவையொன்றை வழங்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 1,000 பேருந்துகளை திருத்துதல்
- போதுமான அளவு பொது போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் பொது மக்கள் அன்றாட போக்குவரத்து தேவைகளுக்கு பொது போக்குவரத்துகளுக்குப் பதிலாக தனியார் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதற்கு பழகியுள்ளனர். இந்த நிலைமை பிரதான பாதைகளில் வாகன நெரிசல்களையும் விபத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் நேரடியான தாக்கத்தினைச் செலுத்தியுள்ளது. இதற்கான தீர்வுகளை காண்பது இலங்கை போக்குவரத்து சபையின் முக்கிய பொறுப்பாகும். இதற்கமைவாக பொது மக்களுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையொன்றை வழங்குவதற்காக 2016 ஆம் ஆண்டிலே 6,000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 6,000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஆகக் குறைந்தது 6,900 பேருந்துகளை நல்லநிலையில் பேணுவது அத்தியாவசியமானதாகும். இலங்கை போக்குவரத்து சபையினது பேருந்துகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பத்து (10) வருட காலத்திற்கு மேற்பட்ட 1000 பேருந்துகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திருத்த வேலைகளைச் செய்வதற்கும் இதற்குத் தேவையான உதிரிபாகங்களை திறந்த கேள்வி கோருவதன் மூலம் கொள்வனவு செய்யும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.