2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தில் பிரதான சுங்கத் தீர்வையற்ற விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்வதற்கு பொருத்தமான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்கு கேள்வி கோருதல் - சுங்கத் தீர்வையற்ற விற்பனை நிலையங்கள் விமானநிலைய வர்த்தக செயற்பாட்டில் முக்கிய பங்கினை வகிக்கின்றதோடு, பண்டாரநாயக்க சருவதேச விமானநிலையத்தில் வருகை மற்றும் வௌியேறும் முனைவிடங்கள் இரண்டிலும் பிரதான வகை சுங்கத் தீர்வையற்ற விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்லும் உரிமை ஒப்பந்தக்காரர்கள் இரண்டு (02) பேர் என்னும் தனி அதிகாரமாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தக்காரர்களைத் தெரிவுசெய்யும் போது இதற்கு முன்னர் எவ்வித கேள்வி நடவடிக்கைமுறையோ அல்லது போட்டி கேள்விகோரும் வழிமுறையோ பின்பற்றப்பட்டிருக்கவில்லை. விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனிக்கு நலன்பயக்கும் விதத்தில் இந்த விற்பனை நிலையங்களை நடாத்திச் செல்லும் பொருட்டு ஐந்து (05) வருடங்களைக் கொண்ட உடன்படிக்கை காலத்திற்கு கேள்விச்செயல்முறைக்கு அமைவாக மிக வௌித்தெரியும் விதத்தில் கேள்வி கோருவதற்கு அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படும் கொள்வனவுக் குழுவொன்றையும் தொழினுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |