• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுகங்கை நீர்த்தேக்கத்தின் பிரதான வேலைகளின் நிருமாணிப்பு ஒப்பந்தத்திற்குரிய வடிவமைப்பு மற்றும் நிருமாணிப்பு கண்காணிப்பு மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு கையளித்தல்
- மாத்தளை மாவட்டத்தின் லக்கல தேர்தல் பிரிவின் பள்ளேகம பிரதேசத்திலுள்ள இடமொன்றில் களுகங்கைக்குக் குறுக்காக களுகங்கை நீர்தேக்கத்தை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மொறகஹகந்த களுகங்கை கருத்திட்டத்தின் பிரதான அங்கமொன்றாகும். களுகங்கை அபிவிருத்திக் கருத்திட்டங்களை மதிப்பிட்டு அங்கீகரிப்பதற்கும் வேலைகளை கண்காணிப்பதற்குமான மதியுரைச் சேவை ஒப்பந்தத்தை 443 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட தொகைக்கு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்குக் கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.