• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரின்மீன் உற்பத்திகாக மக்கரல் மீன் இறக்குமதி மீது விசேட விற்பனை வரியை விதித்தல்
- உள்நாட்டு ரின்மீன் தேவையை நிறைவு செய்வதற்காக வருடாந்தம் சுமார் 20,000 மெ.தொ. ரின்மீன் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் செலவாகும் 5 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் உள்நாட்டு ரின்மீன் உற்பத்தியை ஊக்குவித்ததன் விளைவாக 2012 ஆம் ஆண்டிலிருந்து 4 உள்நாட்டு கைத்தொழிற்சாலைகள் மீன் உற்பத்தி செய்து உள்நாட்டு சந்தைக்கு வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன. இதன்கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள நேரடி தொழில்வாய்ப்புகள் 150 ஆகும். உள்நாட்டு ரின்மீன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 2013 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் ரின்மீன் கிலோ ஒன்றுக்கு 100/= ரூபா வரை வரி அதிகரிக்கப்பட்டதோடு, 2015 ஆம் ஆண்டில் நுகர்வோருக்கு நிவாரணமளிக்கும் வகையில் இந்த வரியானது கிலோ ஒன்றுக்கு 50/= ரூபா வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்போது 425 கிராம் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட மீன்ரின் ஒன்று 280 கிராம் நீருடனான மீன் இருக்க வேண்டுமெனவும் அந்த மீன்ரின் ஒன்று 140/= ரூபா என்னும் உச்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமெனவும் 155 கிராம் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட மீன்ரின் ஒன்று 105 கிராம் நீருடனான மீன் இருக்க வேண்டுமெனவும் அந்த மீன்ரின் ஒன்று 70/= ரூபா என்னும் உச்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆயினும், இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணம் நுகர்வோருக்கு கிடைக்கப்பெறாததோடு, உச்ச சில்லறை விலையை விஞ்சி விற்பனை செய்யப்படுவதும் வரி குறைக்கப்பட்டவுடன் 2015 ஆம் ஆண்டில் ரின்மீன் இறக்குமதியானது 40,000 மெற்றிக் தொன்னை விஞ்சி அதிகரித்துள்ளமையும் அதற்காக 10 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட அந்நிய செலாவணி உறப்பட்டுள்ளமையும் குறிப்பிடலாம் ஆதலால், நுகர்வோருக்கு நிவாரணமளிப்பதற்காக மக்கரல் மீன் இறக்குமதிக்காக வழங்கப்பட்டுள்ள விசேட வரி சலுகையை உரிமப்பத்திர முறையின் கீழ் ரின்மீன் உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கும் ரின்மீன் இறக்குமதிக்கான வரிச்சலுகையை உரிய தரத்துடன் ரின்மீன்களுக்காக மாத்திரம் வழங்குவதற்குமாக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.