• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பத்தரமுல்லையிலுள்ள Waters Edge Hotel மனையிடத்தை Waters Edge Ltd., நிறுவனத்திற்கு குறித்தொதுக்குதல்
- உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்புக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ள Waters Edge மனையிடத்தை பராமரிப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமாக Waters Edge Ltd., என்னும் நிறுவனம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான துணைக் கம்பனியொன்றாக 2009 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. Waters Edge Hotel மனையிடத்தினுள் மாடி வீடமைப்பு கட்டடத்தொகுதி அடங்கலாக ஹோட்டல் வசதிகளை நிருமாணித்து அபிவிருத்தி செய்வதற்காக “Waters Edge Hotel Developers Ltd., என்னும் பெயரில் நகர அபிவிருத்தி அதிகாரசபை பூரண உரிமையைக் கொண்ட புதிய கம்பனியொன்று 2014 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. இந்த நிருமாணிப்புகளுக்குரியதான ஒப்பந்தமானது கேள்வி நடவடிக்கை முறையின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தனியார் நிறுவன மொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. உரிய ஒப்பந்தக்காரர் இந்த நிருமாணிப்பு வேலைகளை ஆரம்பித்திருந்தபோதிலும் தற்போது அதன் நிருமாணிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. Waters Edge Ltd., நிறுவனத்தின் புதிய பணிப்பாளர் சபையினால் மேற்போந்த நிருமாணிப்புக் கருத்திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, இதற்கமைவாக ஏக்கர் 23 றூட் 1 பேர்ச்சஸ் 36.5 விஸ்தீரணம் கொண்ட Waters Edge Hotel மனையிடத்தை 99 வருட கால குத்தகை அடிப்படையில் Waters Edge Ltd., நிறுவனத்திற்கு குறித்தொதுக்குவதற்கும் நிருமாணிப்பு வேலைகள் சம்பந்தமாக உரிய தனியார் நிறுவனத்துடன் உள்ள ஒப்பந்தம் புதிய நிருமாணிப்புகளுக்காக Waters Edge Ltd., நிறுவனத்திற்குக் கையளிப்பதற்குமாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.