• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பார்வை குறைபாடுடைய அல்லது ஏதேனும் உடல் குறைபாடுகள் காரணமாக அச்சு ஊடகங்களை பார்வையிட முடியாதவர்களுக்கு அத்தகைய அச்சு ஊடகங்களை பயன்படுத்துவதற்கான வசதிகள் கிடைக்கக்கூடிய விதத்தில் 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச்சொத்துக்கள் சட்டத்தைத் திருத்துதல்
- புள்ளி விபரங்களுக்கு அமைவாக 2011 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வசித்த பார்வை குறைபாடுடைய அல்லது ஏதேனும் உடல் குறைபாடுடையவர்கள் சுமார் 983,000 பேர்கள் இருந்ததோடு, 2015 ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை ஒரு மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வசிக்கும் பார்வை குறைபாடுடைய 285 மில்லியன் பேர்கள் அல்லது வேறு காரணங்களினால் அச்சு ஊடகங்களை பயன்படுத்த முடியாத ஆட்களுக்காக அச்சு அல்லது வௌியீடுகளை பயன்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. உலக புலமைச்சொத்துக்கள் அமைப்பினால் நிருவகிக்கப்படும் “Marrakesh உடன்படிக்கை" மூலம் அச்சு ஊடகங்களை பரிசீலனை செய்வதில் குறைபாடுடையவர்களுக்கு வௌியீடுகளை பயன்படுத்துவதற்கு இயலுமாகும் விதத்தில் அவற்றை மீள் பதிப்பு செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் அவர்களுக்கு வழங்குவதற்கும் வௌியீட்டு உரிமை சம்பந்தமாக விதிக்கப்பட்டுள்ள வரையறைகளைத் தளர்த்தும் பொருட்டு விதிவிலக்குகளை அறிமுகப்படுத்துவதற்காக உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டப்படுகின்றது. இதற்கமைவாக, இலங்கை “Marrakesh உடன்படிக்கைக்கு" செயல்வலுவாக்கம் அளிப்பதற்கு முன்னர் நடைமுறையிலுள்ள வௌியீட்டு உரிமைச் சட்டங்கள் உட்பட அது சம்பந்தமாகவுள்ள விதிவிலக்குகளை உள்ளடக்கி 2003 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க புலமைச்சொத்துக்கள் சட்டத்தைத் திருத்த வேண்டியுள்ளது. இதற்குத் தேவையான சட்டங்களை வரையும் பொருட்டு ரிஷாத் பதியுதீன் கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.