• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவையை திருத்துதல்
- குற்றமொன்றை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் எவரேனும் ஆள் ஒருவருக்கு சட்டத்தரணியொருவரின் உதவியை பெற்றுக் கொள்ளும் உரிமை நியாயமான வழங்கு விசாரணையொன்றின் அடிப்படை அங்கமொன்றாக கருதப்படும். இதன்படி, கைதுசெய்யப்பட்ட ஒருவரின் முதலாவது வெளிப்படுத்தல் பொலிசாரினால் குறித்துக் கொள்ளப்பட்டதன் பின்னர், அவருடைய விருப்பத்தின் பேரில் சட்டத்தரணியொருவரை சந்திப்பதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுதல் வேண்டும். அதற்கமைவாக கைதுசெய்யப்படும் ஒவ்வொருவரினதும் முதல் வெளிப்படுத்தல் பொலிசாரினால் குறித்துக் கொள்ளப்பட்டதும் அதனை உடனடுத்து குறித்த ஆளின் விருப்பத்தின் பேரில் சட்டத்தரணியொருவரின் ஆலோசனையைப் பெறுவதற்கு அவருக்குள்ள உரிமையை ஏற்பதற்கும் கைதுசெய்யப்பட்ட ஆளுக்கு சட்டத்தரணியொருவரின் சேவையைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லையென அவர் வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் இந்த சேவையை சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணியொருவரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குமான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவையை திருத்தும் பொருட்டு நீதி அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.