2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள கருத்திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருதல் - அம்பாந்தோட்டைதுறைமுக கைத்தொழில் வலயத்திற்குள் நடைமுறைப் படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள கைத்தொழில்கள் தொடர்பில் அடிப்படை சுற்றாடல் கற்கையொன்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு, இந்த வலயத்திற்குள் நிலக்கரி சார்ந்த கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்படக் கூடாதென இந்தக் கற்கையின் மூலம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கக்கூடிய கருத்திட்டங்களை இனங்காண்பதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையினால் வர்த்தக திட்டமொன்று ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் இனங்காணப்படும் வர்த்தக வாய்ப்புகள் அரசாங்க மற்றும் தனியார் கூட்டுத் தொழில்முயற்சிகளாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, முதலீட்டாளர்களிடமிருந்து பிரேரிப்புகளைக் கோருதல், அவற்றை மதிப்பிடுதல், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துதல் முதலியவற்றுக்காக இணக்கப்பேச்சுக் குழுவொன்றையும் கருத்திட்டக் குழுவொன்றையும் நியமிக்கும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |