• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொனராகலை மாவட்டத்தின் துரித நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டம் (வெல்லஸ்ஸ நவோதய)
- நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ள மொனராகலை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான மக்கள் தமது வாழ்வாதாரமாக கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளதோடு, இந்த பிரதேசத்தில் தற்போது நிலவும் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு வசதிகளை மறுசீரமைக்கும் துரித அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, கமத்தொழி்ல் அறுவடைகளை அதிகரிப்பதன் மூலம் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கமக்காரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்னும் பிரதான நோக்கத்தை முன்னிறுத்தி திட்டமிடப்பட்டுள்ள "வெல்லஸ்ஸ நவோதய" துரித நீர்ப்பாசன அபிவிருத்திக் கருத்திட்டம், 2016 - 2019 வரை நான்கு (04) வருட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.