2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொதுமக்களுக்கு வினைத்திறன்மிக்கதும் வசதியுடன் கூடியதுமான புகையிரத சேவையொன்றை வழங்கும் நோக்கில் புகையிரத பெட்டிகளின் பாரிய திருத்த வேலைகளுக்காக வெளித்தரப்பினர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளல் - இலங்கை புகையிரத திணைக்களத்தினால் பயணிகள் போக்குவரத்துக்காக பவர்செட் மற்றும் புகையிதர எஞ்சின்கள் மூலம் இழுக்கப்படும் பெட்டிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புகையிரத திணைக்களத்தினால் தற்போது நடாத்திச் செல்லப்படும் சேவைகளுக்கு அண்ணளவாக 450 புகையிரதப் பொட்டிகள் தேவைப்படுவதோடு, இந்த பெட்டிகள் இரண்டு (2) வருடங்களுக்கு ஒருதடவை பாரிய அளவிலான திருத்த வேலைகள் செய்யப்படுதல் வேண்டும். இந்த பணிகள் தற்போது இரத்மலானை புகையிரத வேலைக்களத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. புகையிரத பெட்டிகள் செய்யப்பட வேண்டிய பாரிய அளவிலான திருத்த வேலைகள் அதிகரித்துள்ளமையினால் மாதாந்தம் போதுமான அளவு புகையிரதப் பெட்டிகளை பழுதுபார்த்து விடுவிப்பதற்கு இயலாமற் போயுள்ளது. இதற்கமைவாக, பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் வசதியுடன் கூடியதுமான புகையிரத சேவையொன்றை வழங்கும் நோக்கில் புகையிரத ஊழியர்களினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்த வேலைகள் அவ்வாறே மேற்கொள்ளப்படுவதோடு, பாரிய அளவிலான திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டியுள்ள பவர்செட்டுக்கள் மற்றும் புகையிரத பெட்டிகள் 200 ஐ துரிதமாக பழுதுபார்த்து ஓடும் நிலைக்கு கொண்டு வருவதற்காக அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு தொழிலாளர்களிடமிருந்து போட்டி விலைகோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |