• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிருவாக மறுசீரமைப்பு சார்பில் நிலை பேறுடைய நிகழ்ச்சித்திட்டமொன்றை ஆரம்பித்தல்
- மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அண்மையில் பாராளுமன்றத்தில் செய்த பொருளாதார கொள்கைப் பற்றிய வெளிப்படுத்தலின் மூலம் இலங்கை அபிவிருத்தி அடைந்த நாடொன்றின் நிலையினை அடைவதற்காக நடுத்தவணைக்கால ரீதியில் இணங்கியொழுகுவதற்கு எதிர்பார்க்கப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்காக வினைத்திறன் மிக்கதும் முனைப்புடனும் நவீனமயப்படுத்தப்பட்டதுமான அரச பொறிமுறையொன்று நிலவுவது அத்தியாவசியமானதாகும். அண்மைக்காலத்தில் பொருளாதார அபிவிருத்தியில் உயர் முன்னேற்றம் கண்டுள்ள சிங்கபூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாய் அமைந்த ஒரு முக்கிய காரணியாகவுள்ளது வினைத்திறனும் நவீன நிருவாக பொறுமுறையும் நிலவியமையுமாகும். இதற்கமைவாக, இத்தகைய நிருவாக பொறிமுறையொன்று நாட்டில் உருவாக்கும் பொருட்டு தேவையான பின்னணியை உருவாக்கும் நிருவாக மறுசீரமைப்பினை அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை சிபாரிசு செய்யும் பொருட்டு விசேட கடமைப்பொறுப்புக்கள் அமைச்சர் (கலாநிதி) சரத் அமுனுகம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.