2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நல்லொழுக்கம் நிறைந்த மாணவர் சமுதாயமொன்றை கட்டியெழுப்பு வதற்கான மைய பாடசாலை முறைமையை மீள் நிருமாணிக்கும் "கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016-2020) - கல்வியை தரம் மிக்கதும் சிறப்பானதுமாக மேம்படுத்தும் செயற்பாட்டின் பொருட்டு "நல்லொழுக்கம் மிக்க புத்தாக்குகை மற்றும் கலை ஆர்வம் மிக்க மனித நேயத்துடனான பிள்ளைகளை கட்டியெழுப்புவதற்காக கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பினை வழங்குதல்" என்னும் தொனிப்பொருளில் அரசாங்தக்தின் ஐந்து முறை கல்விக் கொள்கை பிரகடனத்தின் நோக்கத்தினை அடையும் பொருட்டு "கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை" தேசிய நிகழ்ச்சித்திட்டம் (2016-2020) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பிரதேச செயலகப் பிரிவொன்றிலிருந்து பாடசாலையொன்றை அல்லது இரண்டை தெரிவு செய்து 650 பாடசாலைகளை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கும் இந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும் பிரதி அதிபர்களுக்கும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயிற்சிகளை வழங்கி அவர்களின் ஆற்றலை அபிவிருத்தி செய்வதற்குமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |