2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவினைப் பலப்படுத்துதல் 23 தனியார் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கும் அரசாங்க பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்கும் சொந்தமான 465 பெரிய தோட்டங்களின் காணி உரிமையானது இதுவரை அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளதோடு, அரசாங்கத்திற்குச் சொந்தமான உரிமைகளை பாதுகாத்தல் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது. இந்த காணிகளில் உள்ள செய்கைகளின் பயன் மற்றும் தரத்தினை உயர்த்தும் பொருட்டு பெருந்தோட்ட முகாமைத்துவ கண்காணிப்பு பிரிவைப் பலப்படுத்துவதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |