2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புறக்கோட்டை மனிங் சந்தையை பேலியகொடை பிரதேசத்தில் மீள தாபிப்பதற்கான கருத்திட்டம் - நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் தயாரிக்கப்பட்ட கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கு (2008-2020) அமைவாக கோட்டை, புறக்கோட்டை பிரதேசங்கள் இணைந்த அபிவிருத்தி வலயமொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி கருத்திட்டத்திற்கு அமைவாக பழைய புனித ஜோன் மீன் வர்த்தக நிலையத்தை பேலியகொட பிரதேசத்தில் மீளத்தாபிக்கப்பட்டுள்ளதோடு, மரக்கறி மற்றும் பழவகை தொகை விற்பனை மத்திய நிலையத்தை பேலியகொட பிரதேசத்திற்கே கொண்டு செல்வதற்கும் தற்போது மனிங் சந்தையை நடாத்திச் செல்லப்படும் பிரதேசத்தை பொது போக்குவரத்து வசதிகளைச் செய்வதற்காக பயன்படுத்துவதற்கும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தற்போது புறக்கோட்டையில் நடாத்திச் செல்லப்படும் மரக்கறி மற்றும் பழவகை சந்தையை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான பேலியகொடையிலுள்ள சுமார் 25 ஏக்கர் கொண்ட காணியில் 4 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ள செலவில் சகல வசதிகளுடனும் மீளத் தாபிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |