• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சட்டவிரோத புகையிலை உற்பத்தி வர்த்தகத்தை இல்லாதொழிக்கும் நெறிமுறைக்கான இணக்காப்பாடு
- இலங்கை உலக சுகாதார அமைப்பின் புகையிலைத் தடுப்பு நெறிமுறையை உள்வாங்கிய ஆசியாவின் முதலாவது நாடாகும் என்பதோடு, உலகின் நான்காவது நாடாக 2003 ஆம் ஆண்டின் இந்த நெறிமுறையின் தரப்பொன்றானது. புகையிலை உற்பத்திப் பாவனை பல்வேறுபட்ட தொற்றா நோய், விசேடமாக இருதய நோய் போன்றவற்றிற்கான முக்கிய ஆபத்துமிக்க காரணியாகும். இந்த நாட்டில் பதிவு செய்து கொண்டுள்ள உரிமப்பத்திரக்காரர்கள் புகையிலை உற்பத்திக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக புகையிலை உற்பத்தி கணிசமான அளவு நாட்டில் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சில வருமானம் குறைந்த குடும்ப உறுப்பினர்களும் பராயமடையாதவர்களும் இத்தகைய விலைகுறைந்த சட்டவிரோதமான புகையிலை உற்பத்தியினை பயன்படுத்துவது காணக்கூடியதாகவுள்ளது. இந்த நிலைமை பொதுமக்களின் சுகாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. மேற்போந்த நெறிமுறையில் நுழைவதன் மூலம் சட்டவிரோத புகையிரத வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு பயனுள்ள தடுப்பு பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தும் ஆற்றல் கிடைக்கும். இதற்கமைவாக, சட்டவிரோத புகையிலை உற்பத்தி வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கான நெறிமுறைக்கு நுழையும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.