• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலைபேறுடைய அபிவிருத்தி தொடர்பிலான சட்டமொன்றை வரைதல்
- எதிர்கால சந்ததியினருக்கு அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வதற்கான சாத்தியத்தினை இல்லாமல் செய்யாது தற்போது தேவைகளை பூர்த்தி செய்தல் "நிலைபேறுடைய அபிவிருத்தி" எனப் பொருள்படும். 2030 ஆம் ஆண்டளவில் உலகின் சகல நாடுகளினாலும் அடையப்பட வேண்டிய விசேடமாக இனங்காணப்பட்டுள்ள துறைகளையும் பிரிவுகளையும் தழுவும் 17 நிலைபேறுடைய அபிவிருத்தி குறிக்கோள்கள் உலக சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த குறிக்கோளை அடைவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கமும் கட்டுப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நிலைபேறுடைய அபிவிருத்தி நோக்கத்தினை வெற்றிகொள்ளும் பொருட்டு தேவையான சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்குத் தேவையான சட்டங்களை வரைவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.