• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014/2015 பெரும் போகத்திலும் 2015 சிறுபோகத்திலும் நெற்சந்தைப்படுத்தும் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெற்தொகைகளை அகற்றுதல்
- 2015 / 2016 பெரும்போக நெற்கொள்வனவு நிகழ்ச்சித் திட்டமானது இந்த மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளமையினாலும் இதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளைச் செய்ய வேண்டியுள்ளமையினாலும் தற்போது களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நெற்தொகைகளை துரிதமாக அகற்றுவது அத்தியாவசியமானதாகும். இதற்கமைவாக, பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சர்கள் உபகுழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமும் 54,000 மெற்றிக் தொன் நாட்டரிசியை இடைத்தாங்கல் இருப்பாக பேணுவதற்கும் 264,180 மெற்றிக் தொன் கொண்ட மீதி நாட்டரசியை உடனடியாக விற்பனை செய்வதற்கும் நெற் சந்தைப்படுத்தல் சபைக்கு அதிகாரத்தினை கையளிக்கும் பொருட்டு பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பையும் இந்த விடயத்திற்குரியதாக திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினாலும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்பையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.