2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நடுத்தர வருமான வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான துரித நிகழ்ச்சித்திட்டம் - வீடமைப்பு மற்றும் மனித குடியிருப்பு அபிவிருத்திக்காக அரசாங்கம் உயர் முன்னுரிமை வழங்கியுள்ளதோடு, கடந்த தேர்தலின் போது மாண்புமிகு பிரதம அமைச்சரினால் பொதுமக்களுக்கு முன்வைத்த ஐந்துவித கொள்கைகள் மூலம் அரசாங்க சேவை மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடங்கலாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களுக்கு ஏற்கக் கூடிய விலையில் 500,000 வீட்டு அலகுகளை நகர மற்றும் அதற்கண்மித்த பிரதேசங்களில் நிருமாணிப்பதற்காக துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக துரித நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சர்கள் குழுவின் சிபாரிசுடன் சேர்த்து கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |