• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2016 சனவரி 11 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதிவரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள துப்பரவேற்பாடு தொடர்பான தெற்காசிய மாநாட்டின் 6 ஆவது கூட்டத் தொடர்
- துப்பரவேற்பாடு பற்றிய தெற்காசிய மாநாடானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சார்க் நாடுகளில் நடாத்தப்படும் தெற்காசியாவின் துப்பரவேற்பாடு மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். அதேபோன்று இந்த வலயத்தில் மிக சிறந்த துப்பரவேற்பாட்டினை பேணுவதற்கு அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதும் கூட இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டின் 06 ஆவது கூட்டத் தொடர் 2016 சனவரி மாதம் 11 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதிவரை பங்களாதேஷில் நடாத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி பங்காளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அடங்கிய குழுவொன்றை கலந்துகொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை பற்றி நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.