2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேர்தல் ஆணைக்குழுவின் பணியாட்டொகுதிக்கு அரசாங்க சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை உள்ளீர்த்தல் - அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின் மூலம் தாபிக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அடங்கலாக ஏனைய உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பேரவையின் சிபாரிசின் மீது நியமிக்கப்பட்டதோடு, இந்த ஆணைக்குழு 2015‑11‑17 ஆம் திகதியிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆணைக்குழுவுக்கு கையளிக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த ஆணைக்குழு தாபிக்கப்படும் வரைக்கும் செயற்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் திணைக்களத்தில் கடமையாற்றிய பணியாட்டொகுதியை இந்த ஆணைக்குழுவுக்கு இணைக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |