2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பொலன்நறுவை எழுச்சி மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020 - முக்கியமாக பொலன்நறுவை மாவட்டதிலும் அதற்கண்மித்த ஏனைய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான பொலன்நறுவை எழுச்சி மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் 2016-2020 என்னும் ஐந்து (05) வருட திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதன் கீழ் முன்னுரிமை மற்றும் அத்தியாவசிய கருத்திட்டங்களாக இனங்காணப்பட்டுள்ள குடிநீர், நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற துறைகளுக்குரிய கருத்திட்டங்களுக்கு தேவையான நிதியங்களை வழங்குவதற்கு மக்கள் சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளதோடு, இதற்கமைவாக, இது சார்ந்த தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |