• Increase font size
  • Default font size
  • Decrease font size

2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ரட்டம எலியை - அந்துர துரலை - தேசிய மின்சாரக் கொடை நிகழ்ச்சித்திட்டத்தினை அமுலாக்குதல்
- கிராமிய மின்சார கருத்திட்டத்தின் கீழ் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் 100 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய சகல மாவட்டங்களிலும் 90 சதவீதத்திற்கு மேலாக அல்லது அதற்கு கிட்டிய அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் 2016 ஆம் ஆண்டில் 100 சதவீதமான மின்சார வழங்குகையை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் குறியிலக்காகும். ஆயினும் சுமார் 200,000 வீட்டு அலகுகளுக்கு மின்சாரம் வழங்க முடியுமாக இருந்த போதிலும் இதுவரை மின்சார இணைப்புகளை பெறவில்லையென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இனங்காணப்பட்டுள்ளது மின்சார இணைப்பினை வழங்குவதற்குரியதான அடிப்படை செலவுகளை ஏற்பதற்கு உரிய வீட்டு உரிமையாளர்களுக்கு பொருளாதார வசதி இல்லாமையாகும். மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அடிப்படை அத்தியாவசிய காரணியொன்றாகையினால் மின்சார இணைப்புகளை பெற்றுக் கொள்ளாத வீட்டு அலகுககளுக்கு மின்சார இணைப்புகளைப் பெறுவதற்காக 40,000/- என்னும் உச்சத்திற்கு உட்பட்டு கடன் வசதிகளை வழங்குவதற்கும். இதற்குத் தேவையான நிதியை சமூர்த்தி அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குமாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.