2016-01-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு அதிவேகப் பாதை நீடிப்புக் கருத்திட்டத்தின் இரண்டாம் பகுதியை (பெலியத்தையில் இருந்து வெட்டிய வரையிலான பகுதி) நிருமாணிக்கும் கருத்திட்டம் - தெற்கு அதிவேகப் பாதை நீடிப்புக் கருத்திட்டமானது மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை செல்வதோடு, இது நான்கு பிரதான பகுதிகளை கொண்டுள்ளது. இந்த பாதையின் மொத்த நீளம் 96 கிலோமீற்றர்களாகும். பெலியத்தையிலிருந்து வெட்டிய வரையிலான 26 கிலோமீற்றர்கள் கொண்ட இதன் இரண்டாம் பகுதியின் நிருமாணிப்பு வேலைகளுக்குத் தேவையான நிதியங்களிலிருந்து 85 சதவீதமான 360.29 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட முன்னுரிமை வாங்குநர் கடன் வசதிகளின் கீழ் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும் மீதி 15 சதவீதமான 63.58 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதியை ஹட்டன் நஷனல் வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்குமான உரிய கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |