2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திஸ்ஸமஹாரம நீர் வழங்கல் திட்டத்தினை தரமுயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் - வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரேரிப்பொன்றுக்கு அமைவாக 393 மில்லியன் ரூபா செலவில் திஸ்ஸமஹாரம நீர் வழங்கல் திட்டத்தை தரமுயர்த்தும் பொருட்டு அமைச்சரவையினால் 2015‑11‑18 ஆம் திகதியன்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்தக் கருத்திட்டத்தின் கீழ் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் விடயநோக்கெல்லைக்குள் வரும் வேலைகளை இந்த சபையினால் செய்வதற்கும் ஏனைய நிருமாணிப்பு வேலைகளை அரச அபிவிருத்தி, நிருமாண கூட்டுத்தாபனத்திற்கு கையளிப்பதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |