2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் வான் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை வழங்குதல், நிறுவுதல், மற்றும் செயற்படுத்தல் - கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் தற்போது பயன்படுத்தப்படும் வான் போக்குவரத்து முகாமைத்துவ முறைமை விமானநிலையத்தை மையமாகக் கொண்டு உயர் விமானங்கள் செல்லும் வான் பிரதேசத்தில் விமான பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தற்போதுள்ள தேவைகளுக்கு ஏற்றவாறும் விமானநிலையத்தைச் சுற்றிய விமானப் பயண கட்டுப்பாட்டு வலயத்தின் விமானப் பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்வதற்குமாக 320 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட செலவில் வான் போக்குவரத்து முகாமைத்துவ முறைமையினை வழங்குதல், நிறுவுதல் மற்றும் செயற்படுத்தல் போன்றவற்றுக்காக சருவதேச கேள்வி கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |