• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலது குறைந்தவர்களின் உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சமவாயத்துக்கு செயல்வலுவாக்கம் அளித்தல்
- ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனத்திற்கும் மனித உரிமைகள் பற்றிய சருவதேச உடன்படிக்கைகளுக்கும் அமைவாக "வலது குறைந்தவர்களின் உரிமை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சமவாயம்" (The International Convention on the Rights of Persons with Disabilities) 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை 2007 ஆம் ஆண்டில் இந்த சமவாயத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இந்த சமவாயத்தை இலங்கையில் செயல்வலுவாக்கம் செய்வது இந்நாட்டில் வாழும் வலதுகுறைந்தோர்களின் நலனின் பொருட்டு மிக முக்கியமானதென்பதை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்த சமவாயத்திற்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .