• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் நிதி அமைச்சுக்கும் துருக்கி ஏற்றுமதி கடன் வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- நாட்டின் அபிவிருத்தி பயணத்தை பலப்படுத்துவதில் புதிய அபிவிருத்தி ஒத்துழைப்பாளர்களை கவர்ந்திழுப்பதற்கும் தற்போதுள்ள அபிவிருத்தி ஒத்துழைப்பாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும் வேண்டியுள்ளது. இதற்கமைவாக, அபிவிருத்தி அடைந்த நாடுகளைக் கொண்ட G 20 சங்கத்தின் செயற்பாட்டு உறுப்பினராகவும் தற்போது அதன் தலைவராகவும் உள்ள துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான இருபக்க உறவுகளை நிதி ரீதியிலான ஒத்துழைப்பின் மூலம் பலப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் துருக்கி ஏற்றுமதி கடன் வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் துருக்கி ஏற்றுமதி கடன் வங்கியினால் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 350 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் தொகையொன்றை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.