2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியலமைப்புகான மறுசீரமைப்பு சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல் - புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரயைாடல்களை மேற்கொள்ளும் பொருட்டு 2015‑11‑18 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த உபகுழு கூட்டத்தில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்புத் தொடர்பில் மக்கள் கருத்துக்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஆகிய இரண்டு முறைகளிலும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குழுவொன்றை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மக்கள் கருத்துக்களை வாய்மூலம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு 24 கல்விமான்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் மூன்று உறுப்பினர்களாக இந்தக் குழு சபையொன்றாக செயலாற்றி நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் கூடி மக்களின் வாய்மூல கருத்துகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதம அமைச்சர் மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |