2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக பாதணிகளை வழங்குதல் - 2015 - கஷ்ட, அதிகஷ்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளாக கருதப்படும் பாடசாலைகளில் கற்கின்ற மாணவர்களுக்கு பாதணிகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 640,000 சோடி பாதணிகள் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டவாறு 640 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பிடப்பட்ட தொகை்கு கொள்வனவு செய்யும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |