2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்குபகுதியை நிருமாணிப்பதற்கான கருத்திட்டத்தின் மீதி நிதி ஏற்பாடுகளிலிருந்து இனங்காணப்பட்ட புதிய கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் - தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பின்னதூவயிலிருந்து கொடகம வரையிலான தெற்குபகுதியை நிருமாணிப்பதற்காக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து நிதி வழங்கப்பட்டதோடு, கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியதன் பின்னர் அண்ணளவாக மேலும் 2 பில்லியன் ரூபா மீதியாயுள்ளது. இந்த தொகையைப் பயன்படுத்தி அதிவேகப் பாதைக்கான நுழைவுப் பாதைகளையும் பாலங்களையும் மேம்படுத்துவதற்கும் அதிவேகப் பாதையின் தொழிற்பாட்டு பணிகளுக்குத் தேவையான விசேட வாகனங்களை கொள்வனவு செய்வதற்குமாக உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |