2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்காக வானோடல் தகவல் முகாமைத்துவ முறைமையொன்றை வழங்கி, தாபித்து, கையளித்தல் - இலங்கைக்குச் சொந்தமான வானோடல் தகவல் வலயத்துக்குரிய வானோடல் கட்டுப்பாட்டுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் பிறப்பித்தல், வழங்குதல் மற்றும் ஏனைய வானோடல் வலயங்கிளலிருந்து உரிய தகவல்களை பெற்றுக் கொள்தல் போன்றவற்றுக்காக "வானோடல் தகவல் முகாமைத்துவ முறைமை" பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும், தற்போது இந்த முறைமை நிகழ்கால தேவைகளுடன் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது. நாளாந்தம் கட்டுப்படுத்த வேண்டிய தகவல்களின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதோடு, உரியவாறு முறைமையின் ஒத்துழைப்பு கிடைக்காமை உரிய தகவல்களின் தரம் குறைவதற்கும் பிழைகள் ஏற்படுவதற்குமான நிகழ்தகவு அதிகரிப்பதற்கு காரணமாக அமையுமென்பதனால் வானோடல் தகவல் முகாமைத்துவ முறைமையொன்றை வழங்கி, தாபித்து, கையளிப்பதற்காக சருவதேச போட்டிக் கேள்வி கோரும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |