2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள ஒலிவாங்கி, CCTV முறைமை, பிரதான கடிகார முறைமை உட்பட தொலைபேசி பரிவர்தனை முறைமை முதலியவற்றை புதிதாக பொருத்துதல் - பாராளுமன்றத்தில் தற்போதுள்ள ஒலிவாங்கி, CCTV முறைமை, பிரதான கடிகார முறைமை உட்பட தொலைபேசி பரிவர்தனை முறைமை என்பன பழைய நிலையில் உள்ளமையினால், இவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படும் நம்பகத்தன்மை யினாலான சேவை கிடைக்காத நிலைக்கு ஆளாகியுள்ளது. ஆதலால், 400 மில்லியன் ரூபாவைக் கொண்ட மதிப்பீட்டுச் செலவில் இந்த முறைமையை மீள பொருத்துவதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
|