• Increase font size
  • Default font size
  • Decrease font size

2015-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பதவியேற்பினை நினைவுகூறும் முகமாக 25 மாவட்டங்களில் 3000 வீடுகள் வீதம் சீமெந்து பூச்சிடுதல்
- அதிமேதகைய சனாதிபதி அவர்கள் பதவியேற்று ஒரு (01) வருடம் பூர்த்தியானதன் நிமித்தம் நாட்டிலுள்ள 25 மாவட்டங்களையும் தழுவும் விதத்தில் மாவட்டமொன்றில் 3000 வீடுகள் வீதம் தெரிவு செய்து 75,000 வீடுகளுக்குத் தேவையான கட்டடப் பொருட்களை வழங்கி இந்த வீடுகளை சீமெந்து பூச்சிடுவதற்கான ஒத்தாசையை வழங்கும் பொருட்டு நாடு தழுவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது